நாளைய பொழுது உன்னோடு29💛07❤2018

என் இமை இறகு சரியாமல்
விழித்துக் கொண்டே
உறங்க வேண்டும் என
என் கண்கள்
அடம் பிடிக்கிறது

நாளைய பொழுது
உன்னோடு தான்
என்றான பிறகு
என் கண்கள்
எப்படி இமை மூடும்..!!!

இந்த நாள் இரவு
மட்டும் ஏன் நிலவை
முழுங்கி விட்டு சூரியனை
தொட்டு பிடிக்க ஏங்குகிறது

நாளைய பொழுது
உன்னோடு தான்
என்றான பிறகு
என் இரவு எப்படி
நீளும்.....!!

வழக்கத்தை விட
என் மனதில்
ஏன் இத்தனை
எண்ண ஓட்டங்கள்
ஓடிக்கொண்டிருக்கிறது

நாளைய பொழுது
உன்னோடு தான்
என்றான பிறகு
என் எண்ணத்தோடு
எப்படி வண்ணம்
சேராமல் இருக்கும்...!!!

எனக்குள் இருக்கும்
இதயம் இன்று ஏனோ
என்னை விட்டு
எகிரி குதித்து ஓட
முயல்கிறது

நாளைய பொழுது
உன்னோடு தான்
என்றான பிறகு
என் இதயம் எப்படி
எப்பொழுதும் போல
இருக்கும்.....!!!

நாளைய பொழுது
உன்னோடு தான்
என்றான பிறகு
நான் மட்டும்
எப்படி நானாக
இருப்பேன்....!!
நனைந்து கொண்டிருக்கிறேன்
நாளை பொழியவிருக்கும்
மழைக்காக இன்றே.....!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (28-Jul-18, 10:44 pm)
பார்வை : 81

மேலே