தேரோடும் வீதியிலே---பாடல்---
பல்லவி :
தேரோடும் வீதியில் பெண்ணே
உன் கார்குழலின் மல்லிகை சிரிக்குதே
அந்த நீள்குழலில் என் மனசு மரிக்குதே...
மான்விழியோ?... மலர்க் கணைகள் வீசுதே
புது மௌன மொழிகள் என்னோடு பேசுதே...... (2)
தேரோடும் வீதியில்......
சரணம் 1 :
நீங்காது காற்றின் அலைகள்
நெஞ்சில் இராகம் மீட்டுதே...
தூங்காது கவிதைத் துளிகள்
என்னில் மோகம் கூட்டுதே... (2)
யாரடி நீ பெண்ணே...
பதில் கூறடி என் கண்ணே... (2)
பாவை உன் அழகாலே
பாவையாக ஆனேனே...... (2)
தேரோடும் வீதியில்......
சரணம் 2 :
மான்பாதம் தாவும் அழகில்
கண்ணில் தீபம் ஏற்றுதே...
தேன்தூவும் காதல் மழையில்
என்னுள் தாபம் ஊற்றுதே... (2)
யாரடி நீ பெண்ணே...
முகில் பூவடி என் கண்ணே... (2)
மோதும் உன் நிழலாலே
சேதமாகிப் போனேனே...... (2)
தேரோடும் வீதியில்...