வண்ணத்துப்பூச்சி

வனதேவதையும்
நீ தானே..!
வண்ணத்துப் பூச்சியும்
நீ தானே..!

உயிரோவியம்
நீ தானே..!
உலா வரும் விண்மீனும்
நீ தானே..!

தேன் பருக வந்தாயோ..?
தேடி தேடி அழைந்தாயோ..?

உன் களைப்பை
போக்க அமர்ந்தாயோ..?
கண்மூடிக் கிடந்தாயோ..?

உன்னை தொடும் ஆசையில்
நான் பக்கம் வரும் ஓசையில்..

பயம்கொண்டு
பறந்தாயோ..?

எழுதியவர் : கலா பாரதி (22-Aug-18, 11:38 am)
சேர்த்தது : கலா பாரதி
பார்வை : 56

மேலே