செய்வது அறியாது திகைக்கையிலே

ஏனோ செய்வது அறியாமல் தவிக்கிறேன்
மனம் குழம்பவில்லை
கண்களில் கூட தெளிவு தெரிகையிலே
அது ஏனோ ஒன்றும் செய்ய இயலமால் இருக்கிறேன்
அது ஏனோ
தெரியவில்லையே
புரியவுமில்லையே
ஆனால் குழம்பியது மட்டும் நினைவில் இருக்க
குழம்பிய காரணம் மட்டும் தெரியாமல் இருக்கிறதே
அது தான் ஏனோ ?
செய்யும் செயல் கூட தடுமாறுகிறதே
இது தான் உண்மை என்று செய்ய அது வேறாகிப்போகிறதே
மீண்டும் அந்த செயல் செய்ய அது தவறிப்போகிறதே
அய்யகோ அது ஏனோ என்று பித்து பிடித்தாற் போல் அமர
தலையின் பாரத்தை குறைக்க
மனதின் பாரம் ஆழப்பதிந்திருக்க
அது எது என்று புரியாமல் மனபாரம் புதைத்து வைத்திருக்கிறேனே !
வழியில்லாமல் தவிக்கிறேன்
செய்வதறியாது திகைக்கிறேன் !
என் தோழியே .....

எழுதியவர் : பிரகதி (22-Aug-18, 8:06 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 304

மேலே