அப்பா பிள்ளை
அதி காலை பெரியவனும் சின்னவனும் நேர் எதிர் திசையில் 3 மற்றும் 9 எதிரே நின்றிருந்தாருங்கள் கடிகாரத்திற்குள்.அம்மா அறைக்குள் வருகிறாள் ,மணி 9 .15 ஆச்சு இன்னும் 6 மணி மாதிரி ரெண்டுபேரும் தூங்கிக்கிட்டிருக்கறீங்க என்று சொல்லிகிட்டே திரைசீலையை விலக்குகிறாள்.
குட்டிச்செல்லம் கண்ணமுழிச்சு என்ன பாருங்க டைம் ஆச்சு ஸ்கூலுக்கு போகணும் எந்திரிங்கனு சொல்லிட்டு தான் பாதியில் விட்டுவந்த வேலையை பாக்க அடுப்பங்கரையை நோக்கி விரைகிறாள்.
அரைத்தூக்கத்திலிருந்து மீண்டும் ஆல்தூக்கத்திற்கு செல்கிறார்கள் இருவரும்.
ஆல் தூக்கத்திருப்பவர்களை அலறி அடித்து எழுந்திருக்க வைக்கும் ஒருகுரல் இப்பொழுது
டேய் தம்பி எழுந்திருடா ஸ்கூல் போகணும் லேட்டா போன மலர் மிஸ் திட்டுவாங்கனு சொல்லி முடிப்பதற்குள் பெரியவனுக்கு முழிப்பு வந்து பதறி அடித்து எழுந்தான்.சின்ன தம்பி செல்லக்குட்டி எந்திரிங்கனு அவனை ஒரு குலுக்கு குலுக்கி விட்டு பாதியில் விட்டு வந்த வேலையை தொடர்ந்தால்.
டேய் எந்திரிடா என்று பெரியவன் சின்னவனிடம் ஒரு குட்டி கலாட்டா பண்ணி எழுப்பினான்.
இருவரும் தங்களை ரெப்பிரேஷ் பண்ணிட்டு ஹாலில் வந்து உக்காந்து டிவிஐ ஆன் செய்தார்கள்.டிவி ஆன் ஆவதற்குள் இருவருக்கும் சண்டை ஸ்டார்ட் ஆகியது.இருவருக்கும் இடையில் சொத்து சண்டையை வரப்போகுது எந்த சேனல் பார்ப்பது என்ற சண்டைதான்.
பெரியவன் சுட்டி டிவி வைக்கணும்னு சொல்றன் சின்னவன் போகோ வைக்கணும்னு சொல்றன்.
சண்டை இறுதிக்கட்டத்தை அடைவதற்குள் டிவி ஐ ஆப் செய்கிறாள் அம்மா.பால் ல ஒழுங்கா குடிச்சுட்டு குளிக்க போங்கன்னு சொல்லிட்டே இருவரிடமும் ஒரு வேலையை தருகிறாள்.
சின்னவனே பெரியவன் பால் சாப்பிடுறது உன் பொறுப்பு பெரியவனே சின்னவனை குளிக்க வச்சு கிளப்புறது உன் பொறுப்பு எனக்கு இன்னும் சமையல் வேலை முடியலன்னு சொல்லிக்கொண்டே மீண்டும் சமையல்கட்டிற்குள் நுழைகிறாள்.
சின்னவன் பாலை எடுத்து மூச்சு விடாமல் குடிக்க ஆரம்பிக்கும் முன் பெரியவரிடம் நீயும் எடுத்து குடின்னு சொல்லுகிறான்.
குடிக்க மாட்டேனே நீ என்ன பண்ணுவேன்னு விளம்பரத்தில் வருவதுபோல் ஆடுகிறான் .
குடிக்கலைனா அம்மாகிட்ட சொல்லுவேன் அம்மா இப்போ அடுப்புக்குள்ள இருக்காங்க தோசை கரண்டியால் உனக்கு சூடு கன்போர்ம் என்றான்.இதை எதிர்பாராத பெரியவன் சற்றே நடுங்கித்தான் போனான் என்றுதான் சொல்ல வேண்டும்.உடனே இப்போ குடிக்கிறேன் ஆனா
ஸ்கூல்ல குடிக்க மாட்டேனே என்ன பண்ணுவேன்னு கை விரலை மடக்கி கொக்கரிக்கும் பொது இன்னுமா குளிக்க போலன்னு அம்மாவின் குரல் படுக்கை அறையிலிருந்து கேட்டது.அடுத்தகணம் இருவரும் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தார்கள்.
இருவரும் சமத்தாக கிளம்பி ஸ்கூலுக்கு கிளம்ப ரெடி ஆகியாச்சு.இருவரும் அம்மாக்களிடம் சொல்லிவிட்டு ஸ்கூலுக்கு செல்கிறார்கள்.
இருவரும் ஒரே வகுப்பில் இருந்தால் ஓவர் சேட்டை பண்ணுகிறார்கள் என்று சொல்லி தனி தனி வகுப்புகளில் சேர்த்துவதை கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் இங்கு கதை வேற
பெரியவனை வேற கிளாஸ்ல போடத்தான் நா ஸ்கூல்கு போவேன் இவனோட தொல்லை என்னால தாங்க முடியலன்னு வீட்ல அடம்பிடிச்சு சண்டை போட்டதுனால இருவரும் வேற வகுப்புகளில் படிக்கிறாங்க.
இருந்தாலும் அந்த ஸ்கூல்ல ரெண்டு கிளாஸ்சும் ஒரு பீரியட்ல சேர்ந்துதான் ஆகணும் அதுதான் ட்ராயிங் கிளாஸ்.ஸ்கூலோட ட்ராயிங் மாஸ்டர் லாங் லீவுல போயிருக்காரு அதனால டெம்ப்ரவரியா ஒரு டீச்சர் வாரத்துல ரெண்டு நாள் வாரங்க.
அவர் இப்பொழுதுதான் கல்லூரி படிப்பை முடிச்சிருக்காங்க.அவங்க எப்பொழுதும் ஸ்கூலுக்கு வரும் பொது மாட்சிங்காதான் வருவாங்க.
பிரீ ஹேர் நெற்றியில சின்னதா ஒரு போட்டு, அந்த பொட்டு நைல்
பாலிஷ் கழுத்துல போட்டிருக்கிற சின்ன செயின் அப்புறம் அவங்க செருப்பு இதெல்லாம் அவங்க சேரிக்கு மேட்ச்ஆ இருக்கும்.
இன்னைக்கு அவங்க இன்னும் அழகா இருந்தாங்க
எல்லோரும் அவங்கள பார்த்ததும் மிஸ் இன்னைக்கு ரொம்ப சுபெர்ப் ஆஹ் இருக்கீங்கன்னு சொன்னாங்க
ஆனால் பெரியவன் மட்டும் ஒரு படி மேலே பொய் பாட ஆரம்பிச்சுட்டான்
" மலரே நின்னை காணத்திருந்தால் (ப்ரேமம் சோங்)"
டீச்சர் மனதிற்குள் சந்தோசம் இருந்தாலும் அவனை அதட்டினார் ...
இன்றய கிளாஸ் இனிதே முடிந்தது.
இருவரும் வீடு திரும்பினார்கள் வரும் வழியில்
சின்னவன் பெரியவரிடம் ஐஸ் கிரீம் வாங்கித்தர சொல்றான்.
மழை பெய்யுது இப்போ முடியாது என்று பெரியவன் சொல்ல
அம்மா கிட்ட சொல்லவா னு கேக்குறான்
என்னடா பெருசா சொல்ல போற சொல்லிக்கோன்னு சற்றே தெனாவெட்டாக சொல்ரான்
" மலரே நின்னை காணத்திருந்தால் (ப்ரேமம் சோங்)" சின்னவன் முனங்கினான்
அந்த குளுமையான நேரத்திலும் சற்றென்று வேர்க்க தொடங்கியது பெரியவனுக்கு
சின்னவனை சரிக்கட்ட வேற வழி தெரியாமல் ஐஸ் கிரீம் கடைக்கு முன்னாள் வண்டி நின்றது.
ஐஸ் கிரீம் சாப்பிட்டு இருவரும் வரும் பொது சின்னவன் பெரியவனை பார்த்து ஒன்று கேட்டான்.
எந்த நம்பிக்கைல நீ ஐஸ் கிரீம் வாங்கிக்கொடுத்த நா அம்மா கிட்ட சொல்ல மாட்டேன்னு நெனச்சனு
பெரியவனுக்கு ஒன்னும் புரியவில்லை
அவன் கண் முன்னாடி துடைப்பக்கட்டை ,பூரிக்கட்டை ,செருப்பு மற்றும் பல வந்து போனது.முன்னொருநாள் பார்த்த அம்மன் படத்தின் கிளைமாக்ஸ் வந்து போனது.
இவைகள் எல்லாம் வந்துபோனதால் தனக்கு முன்னாடி வந்த ஆட்டோ தெரியவில்லை.
போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்தது.
ஆறடி உயரம் ஆஜாகுவான உடம்பு ஐயன் பண்ணுன கோடு கசங்காத கஞ்சி போட சட்டை முரட்டுத்தனமான பூட்ஸ் கத்திமுனை போல் ஷார்ப்பாக செதுக்கிய மீசை
என்னடா பகலே கனவை முன்னாடி வர வண்டி தெரியலையா என்று கட்ட குரலில் அவர் கேட்டது உள்ளுக்குள் பயத்தை கொட்டியது
அம்மா சார் கனவுதான்.கனவுல மலர் டீச்சர் னு சின்னவன் சொன்னான்
டேய் சும்மா இருடா ஏன் இப்படி என்ன மாட்டி விடுற
ஐஸ் கிரீம்லாம் வாங்கி கொடுத்தேன்ல என்றான்
அம்மா கிட்ட சொல்லாம இருக்கத்தான் ஐஸ் கிரீம் இவர்கிட்ட சொல்லாம இருப்பதற்கில்லை
நீ பண்ண தப்புக்கு நா ஏன் மாட்டனும்
ரெண்டுபேரும் பேசாம இருங்கடா னு சொல்லிட்டு உங்க வீடு அட்ரஸ் கொடுங்கடா
கான்ஸ்டபிளே அனுப்சு வீட்ல பெரியவங்கள கூட்டிட்டு வர சொல்லணும் என்கிறார் அந்த போலீஸ் காரர்.
வீட்ல போய் என்ன சார் சொல்லுவீங்கன்னு கேட்டான் பெரியவன்
அதை தெரிஞ்சுதான் நாம என்ன பண்ணணும்ன்றதா டிசைட் பண்ணமுடியும்னு ஒரு தொலைநோக்கு பார்வை.
உங்க வீட்டுக்கு போய் உன் பேர சொல்லி இப்படி ஒரு அச்சிடேன்ட் பண்ணிட்டான் வந்து ஆட்டோ காரருக்கு சேட்டலெமென்ட் பண்ணுங்கன்னு சொல்லி கூட்டிட்டு வருவோம் என்ற போலீஸ் காரர் உன் பேரு என்னடான்னு கேட்டார் பெரியவனை பார்த்து.
10 வினாடிகள் யோசித்த பெரியவன் தைரியமாக தெளிவாக மிக சத்தமாக சொன்னான்
எனது பெயர் ....
...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சத்யா தேவ்
அவன் சொல்லி முடிப்பதற்குள் சின்னவன் சொன்னான்
எனது பெயர் நவீன் .நான்தான் வண்டி ஓட்டி வந்தேன் சத்யா தேவ் பின்னாடி உட்காந்து வந்தான் என்று சொல்லிவிட்டு
பெரியவனை பார்த்து தனது கைவிரலை மடக்கி கொக்கரித்தான்.....
இப்பொழுது இந்த கதையை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள்
இந்த முறை பெரியவன் இடத்தில அப்பாவையும் சின்னவன் இடத்தில் மகன் அல்லது மகள்