என் அன்பு கணவா

நீயும் நானும் மட்டும்
மழையில் நனைய வேண்டும்
மழைத்துளியே பொறாமை கொள்ள .,

நீயும் நானும் மட்டும்
நெடுந்தூரம் நடந்துசெல்ல வேண்டும்
நெடுஞசாலையே பொறாமை கொள்ள .,

நீயும் நானும் மட்டும்
கதைகளாய் பேச வேண்டும்
கதைகளே பொறாமை கொள்ள .,

நீயும் நானும் மட்டும்
உலகமே சுற்ற வேண்டும்
பறவைகளே பொறாமை கொள்ள

நீயும் நானும் மட்டும்
விளையாடி மகிழ வேண்டும்
குழந்தைகளே பொறாமை கொள்ள

ஆனால்
உன் மீது நான் மட்டும்
அன்பு கொள்ள வேண்டும்
நீயே பொறாமை கொள்ள
என் அன்பு கணவா..,,

எழுதியவர் : புவனேஸ்வரி (31-Aug-18, 11:06 pm)
பார்வை : 466

மேலே