bhuvaneshwari - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : bhuvaneshwari |
இடம் | : srimushnam |
பிறந்த தேதி | : 15-Sep-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 2213 |
புள்ளி | : 19 |
நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!
என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!
மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!
சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!
தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!
வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!
பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய
நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!
என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!
மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!
சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!
தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!
வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!
பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய
கோடி கோடியாய் பல இன்னல்கள்
கொட்டிக்கிடக்கின்றன பல துன்பங்கள்
குறைகின்ற நாயின் பல குரல்கள்
அடங்கிவிட்டன என் பல திறன்கள்
படிப்பிற்கு மதிப்பில்லா இவுலகில்
பணமேன்ற காகிதத்தை மதிக்கின்றனர்
வண்ணத்துப்பூச்சியாய் பறந்த என்
வண்ணங்களை கலைத்துவிட்டு
சிட்டுக்குருவியாய் திரிந்த என்
சிறகுகளை உடைத்துவிட்டு
தென்னையாய் வளர்ந்த என்
வண்ணங்களை தகர்த்ததால் தவிக்கின்றேன்
ஆனால்
இன்னல்களும் துன்பங்களும்
மின்னல்களாய் வந்தாலும்
நாயிகளின் குரைச்சலுக்கு அஞ்சாமல் - என்
திறமையும் குறையாது இமயத்தை மிஞ்சாமல்
கலைத்துவிட்ட வண்ணங்களுக்கு
நிறமூட்டி மெருகேற்றி
வானெங்கும் பறப்பேன்
பட்டாம்பூச்சியாய் தெரிகின்றாய்
பாவாடை தாவணியில்
ரோஜா பூவும் வெட்கிப்போகும்
உன் புன்னகையில்
கார்மேகமும் கரைந்து போகும்
நீ வெக்கபட்டு சிரிக்கையில்
பனிமலையும் உருகிப்போகும்
உன் பதம் படுகையில்
நானும் தான் சொக்கிபோனேன்
நீ தலைகுனிந்து நடக்கையில் ....
பூக்களுக்கும் காதல் வரும் - உன்
முகத்தை பார்த்தால்
சிந்திக்க மறக்கின்றேன் - உன்
சின்ன விழிபார்வையாலே
சந்திக்க துடிக்கின்றேன் - உன்
அன்னநடை அழகிற்கு
ஓவியமாய் தெரிகின்றாய் - உன்
ஒரே விழிப்பார்வையாலே
காவியமாய் தெரிகின்றாய் - உன்
காதல் மொழி பேச்சாலே
என் காதலுக்கும் உயிர்ப்பு வரும் - உன்
சிணுங்கல் மொழி வெட்கத்தாலே
கல்லூரி காலத்தின்
அழகிய உறவு நட்பு - அதில்
எனக்கு கிடைத்த
அரிய உறவு உன் நட்பு
அடிவாங்கிய நாளே
இல்லை பெற்றோரிடத்தில் - ஆனால்
அடிவாங்காத நாளே
இல்லை உன்னிடத்தில்
வேண்டுமென்றே கோபப்படுத்தி
வேடிக்கைபார்த்தாய் - அது
தெரிந்ததால் அதையும்
ரசித்தேன்
காந்தமற்ற புன்னகையில் - அவள்
கவனத்தை ஈர்ப்பால்
அழகான முகசுழிப்பும்
ஆயிரம் கதை சொல்லும்
கள்ளமில்லா கர்வத்தாலே
அனைவரையும் கவர்ந்திழுப்பல்
திமிராக இருப்பதே
உனக்கு அழகு
திமிரையும் கூட்டுகிறது
உன் அழகு
அழகிய கண்கள் அலைமோதுகையில்
கொஞ்சிப் பார்க்குது காதல் சாவி ...!
அழகுப் பதுமையின் அங்கம் பார்க்கையில்
கொஞ்சம் எட்டிப் பார்க்குது காமச் சாவி ...!
இளமையை ரசிக்க இன்பச் சாவி!
முதுமையில் இனிக்கும் அனுபவச் சாவி !
கல்லச் சாவி கொண்டு திறந்தால்
கல்லறை சென்றும் கலவரமே ..!
நல்ல சாவி கொண்டு திறந்தால்
நடப்பவை எல்லாம் நல்வரவே ...!
எல்லோரிடத்தும் ஒரு சாவி ...
ஜனனத்தில் நுழைய ...
மரணத்தில் தொலைய...
எல்லோரிடத்தும் ஒரு சாவி ...
சாவியை தொலைத்தோர் சிலர் ..
பூட்டை தேடிக்கொண்டே பலர் ...?
எல்லா உணர்ச்சிக்கும் ஒரு பூட்டு
எல்லாப் பூட்டுக்கும் சாவி உண்டு ...!
தேடிக் கண்டு நீ கொண்டால்
உணர்வுகள்
உணர்வுகளின் பந்தியிலே,
முந்தி வந்த கோபத்தின் உச்சினிலே,
உணர்வுதனின் வன்சொல்லில்,
நஞ்சுண்டான் பகையான் !!!
துரோகத்தின் துணையோடு,
உணர்வுகளில் அம்பு எய்ய,
துயரத்தின் தூதுதனில்,
வெள்ளக்குருதி விழியோரம்
வழிந்தோடியதே!!!
நீ இல்லா கணங்களில்,
உன் நினைவோடு நான் பேச,
நினைவுதனின் உணர்வாய்,
இதழ்களின் பிரிவுதனில்,
புன்னகை பூப்பெய்தியதே !!!
மழைச்சாரலின் முத்தத்தில்,
உன் கடைக்கண் பார்வைதனில்,
உணர்வுதனின் உணர்ச்சியிலே,
துளிர்விட்ட நம் உணர்வுப்பூர்வக் காதல்!!!
உணர்வுடன்
தௌபிஃக்
நீயும் நானும் மட்டும்
மழையில் நனைய வேண்டும்
மழைத்துளியே பொறாமை கொள்ள .,
நீயும் நானும் மட்டும்
நெடுந்தூரம் நடந்துசெல்ல வேண்டும்
நெடுஞசாலையே பொறாமை கொள்ள .,
நீயும் நானும் மட்டும்
கதைகளாய் பேச வேண்டும்
கதைகளே பொறாமை கொள்ள .,
நீயும் நானும் மட்டும்
உலகமே சுற்ற வேண்டும்
பறவைகளே பொறாமை கொள்ள
நீயும் நானும் மட்டும்
விளையாடி மகிழ வேண்டும்
குழந்தைகளே பொறாமை கொள்ள
ஆனால்
உன் மீது நான் மட்டும்
அன்பு கொள்ள வேண்டும்
நீயே பொறாமை கொள்ள
என் அன்பு கணவா..,,