புத்தகம்

கற்பனையின் வித்து!
கற்றோரின் சொத்து!

பல சாம்ராஜ்ஜியங்களின் சமாதி !
பல சாமானியர்களின் கலாநிதி!

உணர்வுக் குவியலின் உறைவிடம் !
உண்மைக் கோவிலின் கோபுரம் !

ஆழ் கடலின் ஆழம் அறிவான் ..
உன் ஆளுமையின் ஆழம் எவனுமறியான்?!

புரட்ட புரட்ட புரட்சியும் வெடிக்கும்...
திரட்ட திரட்ட நம்பிக்கை திரவியம் சுரக்கும்...
பருக பருக தேனினும் இனிக்கும்..
சிறுக சிறுக தேடலும் தேடும் ..!

பல குறை பிரசவ படைப்பாளிகளுக்கு
நீயே அறிவுக்கண் திறக்கும் சாவி!
உனை நேசித்து வாசித்தால்
சுவாசிப்பையும் சுகம் அடையச்செய்யும் சாமி !

புத்தனின் அகமே திரிந்து
"புத்தகம்" என்றானதோ..

உனை தீண்டிய பின்
கால்களுக்கும் சக்கரம் பூட்டி
காற்றிலே பறக்குது !

மனதிற்கும் சிறகு முளைத்து
மலை தாண்டியும் திரியுது!!

எழுதியவர் : குணா (6-Sep-18, 3:44 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : puththagam
பார்வை : 3770

மேலே