செம்மொழியானா தமிழ்மொழியே

" செம்மொழியானா தமிழ்மொழியே "

தமிழன்னை பெற்று வளர்த்த தனித்தமிழே நம் சங்கத்தமிழ்
மூவேந்தர்கள் வெற்றியை பாடிய தமிழ் நம் பைந்தமிழ்
வள்ளுவனின் மூன்றாம் பாலில் மயங்கிய வெண்பா தமிழ்
கம்பனின் கைவண்ணத்தில் கவி பாடிய சங்க கவிதமிழ்

தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த தமிழனுக்கு
தமிழ் மொழி அங்கீகாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லையே
நம்மோடு வாழ்ந்த தமிழ் தமிழ் தமிழ் தமிழறிஞர்
முத்தமிழ் அறிஞர் தமிழுக்கு செம்மொழி மாநாடு செய்து
தமிழையும் தமிழனையும் சிறப்புற செய்தார்

எழுதியவர் : முரு தீனதயாளன் (13-Sep-18, 3:32 pm)
பார்வை : 56

மேலே