காந்தியத்தின் சாத்தியம் இப்பொழுதும் எப்பொழுதும்

காந்திஜி
போர்பந்தரில் பிறந்த - மேக
நீர்ப்பந்தல்.

ஆயுதங்கள்
சரண் அடைந்த
அஹிம்ஸை.

உப்புக் காய்ச்சினார்
இந்தியர்களுக்கு
சுரனை வந்தது.

தடி ஊன்றினார்
தேசத்தின்
தள்ளாட்டம் நின்றது.

தன் ஆடை குறைத்து
சுதந்திரக் கொடியேற்றி
தேசத்தின் மானம் காத்தார்.

மகாத்மா....
உன் தேவை
இப்போதும் - இனி
எப்போதும் தேவை.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (21-Sep-18, 12:22 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 59

மேலே