மனதோடு போர்

ஆயுதம் ஏந்தி போர் புரிந்திடின் கிட்டியது வெற்றியாக இருந்திருக்கும் அகிம்சையின் வழியில் மனதோடு போருற்றதால் சுதந்திரம் பெற்றோம்
எவரையும் வீழ்த்துதல் பெரிதன்று
மனதினால் வெல்வதரிது
ஆயுதப்போரெனில் நீண்டிருக்கும் அகிம்சையாதலால் முற்றுப் பெற்றது
ஆயுதம் ஏந்துதல் மனிதர் தம் மரபு
அகிம்சை ஏந்திய நீயே புது வரவு
நீ மண்ணில் தோன்றிய இந்நாளில் மாந்தர் அனைவரும் மரணிக்கும் நொடியிலும் ஆயுதம் தவிர்த்து அறம்காக்க அடியேன் வாயிலாக உறுதியேற்க நிந்தன் மாண்பினை முன்மொழிகிறேன்...

எழுதியவர் : ராமச்சந்திரன் (25-Sep-18, 2:18 pm)
சேர்த்தது : ராமச்சந்திரன்
Tanglish : manathoodu por
பார்வை : 145

மேலே