காலம்
எத்தனை
மணி துளிகள்
நமக்கானது
ஏற்கெனவே எழுதப்பட்டது...
திருத்த முடியாத
கைகடிகாரம்
இறைவனிடம்
பிறக்கும் போதே
தொடங்கியது ஓடுவதற்கு...
எப்போது நிற்குமோ
யாரறிவார்...?
வாழும் போது வசதிக்காக
பொன் பொருள் கூட வருமா ?
உனக்கானது
நேரம் மட்டுமே...!

