பலத்துறைகளின் துறைமுகம்
உங்கள் பேச்சு உரையில் உறைபனி ஒளிந்திருந்தது கேட்போரை மனம் குளிரவைக்க
உங்கள் எழுத்து வரியில் கடலலை எழுச்சி இருந்தது விழுந்தோரை எழவைக்க
உங்கள் போராட்டத்தில் எரிமலை கொதிப்பு இருந்தது போராளிகளின் நெஞ்சம் நிமிரவைக்க
உங்கள் வாழ்க்கையில் பல மவுனங்கள் நிறைந்து இருந்தது தோல்விகளையும் சாதனைகளாய் மாற்றிவைக்க துரோகிகளையும் எதிரிகளையும் மன்னித்து வாழவைக்க
மொத்தத்தில் நீங்கள் பலத்துறைகளின் துறைமுகம்
உதயசூரியனின் மறுமுகம் !