சந்த வேற்றொலி வெண்டுறை

நதியோடும் வழியெங்கும் நாணல்புல் அசைந்தாட
நளினம் கொஞ்சும் !
கதிராடும் கழனியிலே காற்றுடனே கதைபேசிக்
கண்கள் துஞ்சும் !
மதியின் வரவில் மனமுந் துள்ளக்
கொதித்த நினைவும் குளிர்ந்தி டாதோ ?

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Oct-18, 1:47 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 37

சிறந்த கவிதைகள்

மேலே