அதியழகுக் கோலம்

கதிர்மெல்லக் கரம்நீட்டி இருள்துடைத்து விரியும்
***கவினழகாய்ப் மலர்ந்தவல்லி மதிமறைய மயங்கும் !
முதிராத பூங்காற்று சுகமாகத் தழுவும்
***முகிலினங்கள் அலையலையாய்ப் புலர்பொழுதில் உலவும் !
அதியழகாய்க் கீழ்வானம் சிவந்திருக்கும் கோலம்
***அதுகண்டு துயில்கலைந்து விழித்திடுமே ஞாலம் !
உதிக்கின்ற காட்சிதனை அனுதினமும் கண்டும்
***ஒருநாளும் சலித்ததில்லை இருவிழிகள் என்றும் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Oct-18, 1:40 am)
பார்வை : 40

மேலே