என்னவளே நீ அழகு
என்னவளே நீ அழகு
*****************************************
கங்கை நதிக்கரை கோதுமையின் பொன்னிறமோ
சிந்துவின் சமவெளியில் பயின்றிட்ட பண்பாடோ
யமுனையதும் புகழுறவே அமைந்திட்ட தாஜ்மஹாலோ
காவிரியின் வெற்றிலையால் சிவந்திட்ட என் நாவோ
இதுஅழகா அதுஅழகா எதுஅழகு என்றாலும்
புதுமலராய் எனையணைத்து மதுசிந்தும் என்னவளே --உன்னழகு
எதுகையொடு "பா "விரித்தும் அடங்காது கவியியுள்ளே !
(கவின் சாரலன் அவர்களின் " பாரசீகப் பேரழகி " பற்றிய கவிதைப் புனைவின் தாக்கத்தால்
என் சிந்தனையில் உருவான பதிவே இது ஆகும் )