உட்கார்ந்து அணைத்திருக்க

உட்கார்ந்து அணைத்திருக்க
********************************************

பருவமழை பொழிகின்ற கருமைநிறப் பொன்வண்டே
துருவமெங்கும் காணேனே உன்புருவத்திற் கீடுயிணை
இருவாட்சிப் பூதொடுத்து உனக்காக காத்திருக்கேன்
அருவமாய் என்கனவில் வந்துற்ற என்னவளே
உருவமாய் நேர்வாயே உட்கார்ந்து அணைத்திருக்க !

(கருமை நிறம் கொண்டாலும் எனக்கு அவள் பொன்வண்டே)

எழுதியவர் : சக்கரைவாசன் (12-Oct-18, 3:20 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 674

மேலே