பறக்கும் ட்ரெயின்

#பறக்கும் ட்ரெயின்

நித்தம் ஒரு பொழுதும் கவலைகள் அவனை ஆட்கொண்டே இருந்தன.. நாளுக்கு நாள் அது பெருகி கொண்டே இருந்ததை தவிர குறைந்த பாடில்லை...ஏன் இந்த கவலைகள் எதற்கு இந்த குழப்ப சூழ்நிலை என ராமுக்கு இன்னும் தெளிந்த பாடும் இல்லை.. இதில் இருந்து எப்படி விடுபடுவது என்றும் தெரியவில்லை..

எல்லோரும் போல் தான் நானும் இருக்கிறேன்..எனக்கு ஏன் இந்த வேலை நான் ஏன் இப்படி செய்கிறேன்.."நான் பாட்டுக்கு என் வேலையை பாக்காம,நான் ஏன் இப்படி ஆனேன்",என ஒவ்வொரு பொழுதும் அவனுடைய எண்ணங்கள் சிந்தனைகள் இவ்வாறே ஓடி கொண்டு இருந்தன...


ஐ. டி கம்பெனியில் வேலையில் அமர்ந்து 6 மாத காலம் கூட முழுவதாய் பூர்த்தி அடையவில்லை...அதற்குள் வாழ்க்கையில் ஏதோ தொலைத்து விட்டாமோ? என்றொரு கவலை ராமுக்கு..
ஒரு மாறுதலாக எண்ணி ஏதாவது செய்ய வேண்டும்..என்றொரு சிந்தனையும் இருந்தது..

என்ன செய்யவது படித்த படிப்பு,அதற்கு வாங்கிய கடன், அம்மாவின் நகை,அப்பாவின் ஆஸ்துமா போன்றவை ராமுவை இன்னும் அந்த ரோதை கொண்ட நாற்காலியிலே அமர செய்து..அதே லெனவோ டெஸ்க்டாப்,அதே எம்.எஸ் எக்செல்,தினமும் அதே ஒரு சுழற்சி..மறு நாளும் அதே..என அவனுடைய வாழ்க்கை சுழன்று கொண்டு இருந்தது..
அந்த 18டிகிரி செல்சியஸ் ஏ.சி குளிரும் அவனுக்கு ஒரு நெருடலாக இருந்தது..
மனம் ஒரு இடத்தில் இருப்பு கொள்ளாமல் அங்கும் இங்கும் தடுமாறியது..

இவ்வளவு நெருடல்கள் இருந்தும் அவன் வெளிக்கொணர முடியாமல் தினசரி அலுவல்களை தொடர்ந்தான்..
பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் ஒரு கபட சிரிப்போடு அனைத்தையும் கடந்து சென்றான் ராம்...அந்த கபட நிலைக்கு காரணம் அவனுடைய கடந்த காலம் குடும்பம்,அப்பா, அம்மா,கடன்...இது எல்லாவற்றிற்காகவும் தான்...


அது ஒரு திங்கட்கிழமை வழக்கம் போல் சுழற்சியை தொடர,வேக வேகமாக அந்த சப்வேயில் கூட்டத்துடன் கூட்டமாக ஓடி கொண்டு இருந்தான் ராம்..5 ரூபாய் மின்சார ரயில் டிக்கெட் ஓடும் ஒட்டத்திலே ஆன்லைனில் பதிவு செய்தாயிற்று... இவன் போவதற்குள் ட்ரெயின் வந்து விட்டது..செய்வது அறியாமல் கிராசிங்கில் இறங்கி அந்த ட்ரைனை பிடித்தான் ராம்..

ஒரு இடம் காலியாக இருக்க வயதான முதியவர் உட்கார போவதற்குள் போய் உட்கார்ந்து காதிலே ஹெட் போனை மாற்றினான்..அவரும் ஒன்றும் சொல்லாது கலியுகம் என்று தலையில் தட்டி கொண்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார்...

"ராஜாலி நீ காலி"..என பாட்டு ஹெட் போனில் ஒலிக்க பறக்கும் ட்ரெயின் டைட்டில் பார்க் நோக்கி பறந்து கொண்டு இருந்தது..பாட்டு கேட்டு கொண்டும் தனது தலைகளை இசை கேற்ப அசைத்து கொண்டும் கண் மூடிய நிலையில் இருந்தான் ராம்..

ட்ரெயின் சென்று கொண்டே இருக்க இறங்க வேண்டியவர்கள் எல்லாம் இயந்திரம் போல அந்தந்த நிறுத்தங்களில் இறங்கி கொண்டு இருந்தார்கள்...ஒரு சில நிமிடம் கழித்து,பாடல் "வை வை வை வைபய் என்ன இழுக்குற"... என மாற அய்யயோ இந்த பாட்டா என மாற்றுவதற்காக கண் விழித்தான்..ராம்..

ஆச்சரியம் ட்ரைனில் இவனை தவிர வேறு யாரும் இல்லை..ஹெட் போனை அவிழ்த்து மொபைலோடு சேர்த்து தன் பையில் வைத்தான் ராம்..என்ன நடக்கிறது என்ன செய்வது என்று புரியவில்லை.. ஜன்னல் வழியே எட்டி பார்த்தான் ஒரே வெள்ளை யாக தெரிந்தது. அப்போது "நீங்கள் இறங்க வேண்டிய இடம்,ராம் இறங்கி கொள்ளுங்கள்".என எப்போதும் கேட்கும் அந்த ட்ரைனின் கம்ப்யூட்டர் ரெகாட் சொன்னது..

ராம் இறங்கி நடந்தான் அங்கேயும் வெள்ளையாகவும்,ஒரே புகை மூடமாகவும் இருந்தது...உடனே கூகுள் மாப்பில் லொகேஷன் ஆன் செய்து பார்த்தான்.. ஒன்றும் லோட் ஆக வில்லை..அப்போது அவன் செல்லில் அது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போக வழி காண்பித்தது..அதன் படி அவன் நடந்தான்..நெடுந்தூரம் போல இருந்தது,அந்த வெள்ளை பனி மூட்டத்தில் அவன் தொடர்ந்து அதில் காண்பிக்கும் ரைட்,லெப்ட் களை பார்த்து சரியாக நடந்து கொண்டு இருந்தான்...

மீண்டும் போன் சிணுங்கியது,யூ ரீச்சிட் தி பிளேஸ் இன் 2 மினிட்ஸ்...ஒரு வழியாக அந்த இடைத்தை அடைந்தான் ராம்..
ஓரு கருப்பு நிற கதவு அந்த வெள்ளை விசித்திர இடத்தில்,உள்ளே நுழைந்தான்..வழக்கம் போல அதே கருப்பு நிற லெனவோ டெஸ்க்டாப்,அதை பார்த்து சற்று முகம் சுழித்தான்.. இருந்தாலும் அந்த ரோதை நாற்காலியில் அமர்ந்து டெஸ்க்டாப் பை பார்த்தான்..

"அதில், வெல்கம் ராம்,"... என்று இருந்தது கண்டினு டு கிளிக் செய்யவும்,கிளிக் செய்தான்... அதில் பெயர்,அட்ரஸ்,பேங்க் டீடெயில்ஸ்,போன்ற காலம் இருந்தது அனைத்தையும் பில் செய்தான்... அடுத்து
உங்களுக்கு தேவைப்படும் பணத்தொகை என்றொரு ஆப்ஷன் ஆச்சரியமாக இருக்க, லோன்,நகை, அப்பா மெடிக்கல் பில் என எல்லாத்தையும் கூட்டி கூட்டி ஒரு 2 கோடி என டைப் செய்தான்..மீண்டும் கிளிக் செய்தான்.. ஆர் யூ சூயர் டூ க்ஷேவ்
என இருக்க மீண்டும் ஒரு முறை பேங்க் டீடெயில்ஸ்,ஐ. எப். சி கோட், எம்.ஐ.சி, ஆர் நம்பர் எல்லாவற்றையும் டபுள் செக் செய்தான்...பிறகு க்ஷேவ் செய்தான் ராம்..

"தான்க் யூ ராம்,அமௌண்ட் வில் பி ட்ரான்ஸ்பெர் இன் யூ ஆர் அக்கோவுண்ட் சக்ஸஸ் பியூல்லி"..முகம் மலர்ந்தான்...
உடனே பணம் தனக்கு வந்துவிட்டதா என பேங்க் ஆப்பில் போய் செக் செய்தான் ராம்..அமௌண்ட் கிரெடிட் ஆகவில்லை.. அதற்காக காத்துகொண்டு இருக்கும் போது போன் சிணுங்கியது...


அளறிக்கொண்டு விழித்தான்..போனில் "பாஸ்" என்று இருந்தது..எடுத்தான்...ஹெலோ ராம் இடியட் எங்க இருக்க டைம் என்னாச்சு? சார் சார் என்று உளறினான்.. சுற்றி முற்றி பார்த்தான் ட்ரெயின் கடைசி ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தது.."சாரி, சார் ட்ரெயின் லேட் ,ஆம் வில் பி இன் 30 மினிட்ஸ்"என போனை கட் செய்தான்..

நடந்தது கனவா, இல்லை உண்மையா என்று கூட தெரியாமல் மீண்டும் பேங்க் ஆப்பில், கிரெடிட் வந்து இருக்கிறதா..என்று செக் செய்தான் ராம்..

-முகம்மது முஃபாரிஸ்.மு

எழுதியவர் : முகம்மது முஃபாரிஸ்.மு (24-Oct-18, 8:38 pm)
சேர்த்தது : Mohamed Mufariz
பார்வை : 187

மேலே