அடங்காத ஆசைகள்

திருமணம் ஆகியும்
இரண்டு குழவிகள்
பெற்ற பின்னும்,

தந்தை விரல் பிடித்த நினைவில் ,
இப்பொழுதும்
விரல் பிடித்து
நடக்க ஆசை

தமக்கையுடன் சண்டையிட்ட
நினைவில்,
இப்பொழுதும்
காய் விட்டுப் பழம் விட
ஆசை

தாய் மடியில் படுத்துறங்கிய
நினைவில்
இப்பொழுதும்
அவள் மடி தேடித் துயில
ஆசை

தோழனுடம் பந்தயம் போட்ட
நினைவில்
இப்பொழுதும்
போட்டியிட
ஆசை

கருக்கிய சோழத் தட்டையை
கடித்துத் தின்னபடி
வீதியில் ஊர்ந்து வர
ஆசை

பட்டியில் கோடுபோட்டு
அம்மா வையும்வரை
பாண்டியாட்டம்
விளையாடி வர
ஆசை

புவி

எழுதியவர் : (27-Oct-18, 3:05 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : ADANGATHA aasaikal
பார்வை : 444

மேலே