தித்திக்கும் சந்தோசம்

திருத்தமாய் ஒரு
திருமண விழா... அது
நண்பன் திரு.சசிகுமார் & திருமதி.சீதா
ஆகியோரின்
அன்பு மகள் ரமாபிரியா
திரு.ராஜன் & திருமதி.உமாராணி
ஆகியோரின்
அன்பு மகன் கணேஷ்
திருமண விழா..

அன்பான இதயங்கள்
கரங்கள் பிடித்தன..
கல்யாண மாலைகள்
கழுத்தில் சேர்ந்தன... இங்கு
நிர்வாகவியலும் அறிவியலும்
கைகோர்த்துக் கொண்டது...
உலகம் வெல்லும் புது இயல்
ஒன்று உதயமானது...

சசிகுமார்... எல்லோரும்
கல்லூரி சேர்ந்து தன்னை
வளர்த்துக் கொண்டபோது
இவன் மட்டும் தன்னை
வளர்த்துக் கொண்டு
கல்லூரி சேர்ந்தவன்...

இவன் இருக்கும் இடம்
வசந்தமெல்லாம் வசமாகும்...
சுகந்தமெல்லாம் வரமாகும்...
இந்த சிற்பம் தன்னைச்
செதுக்கியவர்களோடு
தானும் சேர்ந்து தன்னைச்
செதுக்கிக் கொண்டது...
எல்லோரும் விரும்பும் வண்ணம்
தன்னை உருவாக்கிக் கொண்டது...

வைபவங்கள் எல்லாம்
சம்பவங்கள் ஆகும்...
நண்பன் வீட்டுத் திருமணம்
சரித்திரம் ஆகும்...

இனிய புதுமணத் 
தம்பதியரே... 
முதன்மையானவற்றை  
முதலாய்ச் செய்து...  
முடிவினை மனதில் வைத்த 
ஆரம்பம் கொண்டு...  
செயல்களை முந்திச் செய்து...  
புரிந்தபின் புரியவைத்து...  
ஜெயிக்கவிட்டு ஜெயித்து...  
ஒன்று பட்டு உழைத்தால்  
பத்தும் பத்தும் இருபதல்ல  
அதற்கும் மேல் என்பதறிந்து...  
வெற்றிகளை நோக்கிய பயணத்தில் 
கத்திகளை வெல்லும் 
கூர்மையான புத்தியும்  
ஆகிய ஏழு ஸ்வரங்களின்  
இனிய ராகங்களில்...  
வழிகளும் வானமும் வசப்படட்டும்... 
வசந்தங்கள் வரமாகட்டும்... 

திருமண வைபோகம்
தித்திக்கும் சந்தோசம்...
மணமகன் மணமகள்
மனசும் மகிழ்ந்தது...
மங்கல யோகங்கள்
இனிதே பிறந்தது...

இல்லறம் எனும் நல்லறம் காணும் 
திருவளர்ச்செல்வன் கணேஷ்...
திருவளர்ச்செல்வி ரமாபிரியா...
இல்லறப் பூங்காவில்  
உலா வரப்போகும்  
உல்லாசப் பறவைகளே!  
அன்பான உதாரண ஜோடியாய் 
செல்வங்கள் பதினாறும் பெற்று  
இனிதே வாழ்க... இன்பமாய் வாழ்க!!  
நீடூழி வாழ்க...  நிலைத்த
புகழோடு வாழ்க!!!  

எல்லா வகையிலும்
சீரோடும் சிறப்போடும்
நடந்த இந்த வண்ணமிகு
திருமண விழா
ஒரு மைல்கல்... அது
ஓர் சாதனைக்கல்...
திருமண விருந்தில்
வயிறு நிறைந்தது...
சசிகுமாரின் உபசரிப்பில்
மனசு நிறைந்தது...
ஆனந்தம் அனைவரையும்
ஆட்கொண்டது...

அன்புடன் வாழ்த்தும்... 
ஆர். சுந்தரராஜன்.  
👍👏🌹🎂🍰🌺🌷

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (30-Oct-18, 10:05 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 299

மேலே