உடலை கருவியாய்

எண்ணங்களுக்கு
தினம் பல
வண்ணங்களை
வாரி வாரி
பூசிக்கொள்ளும்
விட்டில்
மனித உலகம்.

சொல்லுக்கும்
செயலுக்கும்
தொடர்பின்றி
பொய்யுக்கும்
புரட்டுக்கும்
புகழ் சூட்டி
மெய்யுக்கும்
உயிருக்கும்
அழிவு சேர்க்கும்
அரக்க உலகம். . . . .

அன்புக்கு
விலை வைத்து
அறிவை விற்று
உடலை
கருவியாய்
உருவாக்கி வரும்
வியாபார உலகம்.

உணவை நஞ்சாக்கி
உறவை பொய்யாக்கி
உதிரத்தை நோயாக்கி
பசியை பொய்யாக்கும்
பகட்டு உலகம்.

எழுதியவர் : (24-Nov-18, 3:56 pm)
சேர்த்தது : MuRaNi
பார்வை : 34

மேலே