அவசரத் தூது
யுத்தம் யுத்தம் இனி
உனக்கும் எனக்கும்
என்று தூது விட்டாயே...
நடுங்கியது என்
நாடோடு சேர்ந்து
நானும் தானடா...........
ஆஹ முத்தத்தால்
யுத்தம் புரியவா நீ
தூது விட்டாய்.........
அடடா சத்தம்
இன்றி யுத்தமாடா
என் சகலகலா
மன்னவனே.............
தற்போது சகலரிடமும்
அறிவிப்பு விட்டு
விட்டேன்..........
ரகசிய அறை என்று
ஒன்று இல்லையடா
என் சின்னவரே.............
நீ என்றோ என்
விழி வாளாலே
வீழ்ந்து விட்டாய்
என்று ..........:
அறிவித்திருந்தால்
கட்டளை இட்டு
இருப்பேனோடா
நானும் என் ராசாவே............
நீயும் கூறலயே
அதை லேசா
இன்று நிலமை
மாறிப் போனதேடா
மிகவும் மோசமாகவே
மகராசா...........
மாசக் கணக்கில்
போர் புரியவே
ஆவேசமாகி விட்டார்கள்
போர் வீரர்கள்...........
காசிக்குப் போய்
ராசி பலன் பார்த்து
விட்டு சாகாசமாக
வாயா சாதிக்க
முடியாது உன்னால்
அது சாத்தியம்
இல்லையடா
சகலகலா மன்னரே
முத்த யுத்தம் நிறுத்தமடா....😂😂
( ஜாலியாக ஒரு கேலி )
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
