தோழி

காரணம் இருந்தும்
காதலை சொல்ல
மறுக்கிறேன்
உன்னிடத்தில்.

நீண்டகாலம் என்னோடு
பயணித்தவள் நிறை
குறை யெல்லாம்
அறிந்தவள் நீ.

கொற்றவையின் பலியாடாய்
உன்னையும் என்னையும்
பேசி களித்தார்கள்
நண்பர்கள் கூட்டம்.

மென்மையான உன்
குணத்தை இந்த
மிருகத்தின் கடிவாளமாய்
உணருகிறது நெஞ்சம்.

விழியோ தடம்
புரளவில்லை உன்னை
நோக்கியே அனுதினமும்
நடை போடுகிறது.

நீ உணரும் தருணம்
இம்மை முடிந்தும்
மறுமை காலமும்
காத்திருக்கும் என்
💓💓💓 ம்.........

எழுதியவர் : சூர்யா. மா (26-Dec-18, 2:17 pm)
சேர்த்தது : சூர்யா மா
Tanglish : thozhi
பார்வை : 362

மேலே