வான்மழையே வான்மழையே

வான்மழையே வான்மழையே
கடலினில் சேரவா?
நீ தோன்றினாய்...
நதிகளில் ஓடவா?
நீ ஏங்கினாய்...
பூமிக்குள் மண்ணையும் தொட்டு
நீ சென்றாய்..
நீயும்நானும் பேசவே
சாலையோர மரங்களும்
பேருந்தின் நிறுத்தம்கூட
நமக்காய்காத்து கிடக்குமே!
மண்ணின் வாசம் நுகரும்போது
எந்தன் சுவாசம் உறையுமே!
வானவில் இன்றியே
வான்மேகங்கள் கரைந்தோடுமே!
வற்றும்கடலாய் மாறினேன்!
நீயும் நடந்து போகத்தான்
பசுமை மரமாய் மாறினேன்
எந்தன் காற்றை நீ நுகரத்தான்!
உந்தன் அழகில் சிந்தும் தேனை
எந்தன் நாவில் சுவைப்பேனே!
பாடிடும் குயிலைபோல்
உன்குரலை நான் கேட்பேனே!!

எழுதியவர் : sahulhameed (17-Feb-19, 9:24 am)
சேர்த்தது : HSHameed
பார்வை : 62

புதிய படைப்புகள்

மேலே