அடையாளம்

விண்மீன்கள் கோடியுண்டு
விண்ணகரம் ஒன்றுதான்...

கோலங்கள் பல உண்டு
பூலோகம் ஒன்று மட்டும்...

மேகங்கள் பல உண்டு
ஆகாயம் ஒன்றுதான்...

உன் அடையாளத்தை வாழ்க்கை முழுதும்
வேறொருவனிடம் தேடிக்கொண்டிருக்கிறாய்

ஒன்றை அறிவாயா...
உன் எண்ணங்கள் பலரின் பிம்பம் ஆகலாம்
பலரது எண்ணங்கள் உன்னுள் உறைந்தும் விடலாம்...
ஆனால்
உன்னை நீயே பிறரின் பிம்பமாக்கி கொள்ளாதே....

உன் உளி கொண்டு உன்னையே நீ செதுக்கிக் கொள்
இன்னொருவன் உளியில் நீ அழகாய் இருப்பதை விட
உன் உளியால் சற்றே நெளிவாய் இருப்பது மேல்...

எழுதியவர் : (17-Feb-19, 12:26 pm)
சேர்த்தது : சி பிரபாகரன்
Tanglish : adaiyaalam
பார்வை : 221

மேலே