உண்மையின் வழி பயணிப்போம்

உண்மை பேசுபவனை இந்த உலகமே தனிமைப்படுத்தலாம்.
உடனடியாக கொலையும் செய்யலாம்.
ஆனால் உண்மைக்குப் புறம்பானவர்கள் ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைப்பார்கள்.
இறப்பதற்கு முன்பாகவே நரகத்தின் தரிசனத்தை அனுபவிப்பார்கள்.

நரகம், சொர்க்கம் என்ற ஒன்று இல்லை என்று தானே கடவுள் என்று மார்தட்டியவர்களும் மரணப்படுக்கையிலே விழுந்து மாண்டுப் போனார்கள்.

தனக்கொரு குழந்தை பிறக்கவில்லை என்று வாடும் பெற்றோர்களுக்கு மத்தியில் உருவான குழந்தை கருவை கலைத்து விட்டு வெறும் காம சுகத்திற்காக வாழும் மனிதப் பிறவிகள் அதிகரித்து வருவது அதிக வேதனை தருகிறது.
அதே வேளையில் அநாதை விடுதிகள் நிரம்பி வழிவதையும்,
குப்பைத் தொட்டிகளில் குழந்தைகள் வீசப்படுவதையும் கண்டு மனம் பதைபதைக்கிறது.

பெண் என்றாலே காமப் பதுமையாக பார்க்கப்படும் சூழலில் பெண்ணிற்கு காமமே அத்தியாவசியம் என்று சில பெண் செயல்பாட்டாளர்கள் ஊடகங்களில் பகிரங்கமாக பேசி வருவது ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது.
இத்தகைய பேச்சுகள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளையே அதிகரிக்கும் என்பதை அறியாத அளவிற்கு அவர்கள் அறியாமையில் இருக்கிறார்களா?
அல்லது காமம் கண்களை மறைக்கிறதா?

தினம் செய்தி பத்திரிக்கைகளில் பாலியல் வன்கொடுமை செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.

வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கடைக்கு பால் வாங்கச் சென்ற சிறுமியை கடத்திக் கொண்டு போய் மூன்று பேர் கொண்ட கும்பல் கற்பழித்து உள்ளது.
பெற்றோரின் புகாரின் பேரில் போலிஸ் நடத்திய தேடுதலில் ஒரு வீட்டிலில் இருந்து மிக்கப்பட்டுள்ளார் அப்பெண். அப்போது தப்பி செல்ல முயன்ற 21 வயது இளைஞர் குற்றவாளிக்கு காலில் அடிப்பட்டுள்ளது.
அதே இடத்தில் அந்த குற்றவாளியை தண்டித்து இருந்தால் மீண்டும் அது போல் நிகழுமா?
ஆனால் போலிஸ் என்ன செய்திருக்கிறது?
அடிப்பட்ட குற்றவாளியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, சிகிச்சை அளித்து அவர் சரியான பிறகு விசாரணையைத் தொடரும் என பேட்டி அளிக்கிறது.
இது தான் சனநாயகத்தின் மிகப் பெரிய வீழ்ச்சி.

சனநாயகம் புனிதமானது. ஆனால் அது பெரும்பாலும் குற்றவாளிகளையே பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

தீவிரவாதிகள் தானாக உருவாதில்லை.
நாமே உருவாக்குகிறோம்.
இன்றைய உள்ளூர் குற்றவாளி பணத்திற்காக நாளைய உலக தீவிரவாதியாக மாறுவான் என்பதில் ஐயமே இல்லை.

இதே போல் இரண்டு நாட்களுக்கு முன் 13 வயது சிறு பாதிக்கப்பட்டுள்ளார்.
அதற்குக் காரணமான குற்றவாளியை இன்னும் கைது செய்யவில்லை இந்த போலிஸ்.

இது இந்தியாவில் மட்டும் அல்ல. பாக்கிஸ்தானில் கூட தொடர்ந்து நடப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இதிலிருந்து விலகி வேறுபக்கம் சென்றால் கள்ளக்காதல் மிகப்பெரிய பூதகரமாக உள்ளது.
பெண்கள் ஒழுங்கெட்ட ஆண்களைப் போல இரண்டு மூன்று ஆண்களுடன் கள்ளக்காதல் கொள்வதாகவும் அதனால் கள்ளக்காதலர்களுக்குள் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் வெறித்தனமான அளவிற்கு வளர்ந்து உள்ளது கள்ளக்காதல் குற்றமல்ல என்று சுப்ரீம்கோர்ட் வழங்கிய தீர்ப்பிற்கு பிறகு.
இன்னும் அது வளரலாம்.

இப்படி தரங்கெட்ட வாழ்க்கை முறை எங்கிருந்து வந்தது என்றால் மனிதர்கள் உண்மைக்கு புறப்பான வாழ்க்கை முறையை அதிகமாக விரும்புகிறார்கள்.
அதில் இன்பம் இருப்பதாக கற்பனையில் குற்றங்களைப் புரியத் தொடங்குகிறார்கள்.

நீதி மன்றம் என்பது நமக்காக நாமே ஏற்படுத்திக் கொண்ட நம்மவர்களால் ஆன மன்றம் தான்.
ஆனால் அங்கே உண்மை பேசி நீதி வெல்வதற்கு பதில் பொய் பேசி அதிகமாக பணம் சம்பாதிக்கும் வர்த்தகக் கூடமாக மாற்றியதும் நாம் தான்.

தன் வார்த்தை தனக்கு எதிராகி தன்னையே குற்றவாளி ஆக்கினாலும் உண்மையில் இருந்து மாறாத தன்மை வேண்டும்.
உண்மையில் செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பதில் அச்சம் தேவை இல்லை.

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதை பேசும் இந்திய அரசாங்கம் இதுவரை என்ன செய்தது என கடந்த காலத்தை பாருங்கள்.

தீவிரவாதிகள் பிடிப்பட்டால் பெரிதாக எந்தத் தண்டனையும் வழங்காமல் வேளாவேளைக்கு உணவிட்டு பாதுகாப்புக் கொடுகிறது.
சில நாட்களுக்கு முன்பு பாக்கிஸ்தானிய தீவிரவாதிகள் புழல் சிறையில் வசதியாக வாழ்வதும், பிரியாணி சமைப்பதும் பற்றிய புகைப்படங்கள் வெளியாகின.
அதை அப்படியே மூடி மறைத்துவிட்டது அரசியல்.

அரசியல் இல்லாமல் தீவிரவாதிகள் இல்லை.
ஏன் இந்தியாவில் காஷ்மீர் தலைவர்களை மட்டும் பிரிவினைவாத தலைவர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள்?.

இதுவரை தமிழகத்தில் திமுக, அதிமுக, போன்ற தமிழக திராவிடக்கட்சிகளே ஆட்சி செய்து வருகின்றன.
இந்நிலை மாறி தேசிய கட்சி மாநில கட்சியோட கூட்டணியை தவிர்த்து தனித்து நின்று தமிழக சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்குமானால் தமிழகத்தில் உள்ள பிரிவினைவாதத் தலைவர்களை அடையாளம் காணலாம்.
தமிழகத்தை காஷ்மீர் போல் மாற்றுவதற்காக நிச்சயம் தமிழ் தேசிய கட்சிகள் முயற்சிக்கும்.
இதனாலேயே மத்திய, மாநில கட்சிகள் எப்போதும் கூட்டணி அமைத்தே தமிழகத்தில் தேர்தலை சந்திக்கிறார்கள்.
இப்போது தமிழ் தேசியம் பற்றியும் தமிழ்நாடு தனி நாடு ஆக மாற வேண்டும் என்பதை நோக்கமாகவும் கொண்ட தமிழ் தேசிய இயக்கங்கள் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அமைதியை விரும்பக் கூடியவர்களாகத் தான் காணப்படுகிறார்கள்.

காலம் எல்லாவற்றையும் மாற்றக்கூடியது.
எந்த நேரமும் என்ன வேண்டுமானால் நடக்கலாம்.
ஆனால் உண்மை என்றும் மாறாது.
நாம் மொழி, இனம்,, மதம், சாதி, நாடு, நிறம் போன்ற பல பிரிவினைவாதங்களால் பிரிக்கப்பட்டாலும் அவற்றை எல்லாம் கடந்து நாம் சகோதர, சகோதரிகள் என்பதே அந்த உண்மை.
உண்மை உணர்ந்து பார்த்தால் நான் சொன்ன உண்மைகள் புரியும்.
அன்பு கலந்த நன்றிகளுடன் வாழ்த்துகிறோம்.
எங்கும் அன்பு அரசாளட்டும்.
எங்கும் அமைதி பரவட்டும்.
வந்தே மாதரம்.
ஜெய்ஹிந்த்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Feb-19, 2:49 pm)
பார்வை : 1883

மேலே