எறும்பு

பயிற்சி அளிப்பதுவுமில்லை
பலமாக போதிப்பதுவுமில்லை
பம்மாத்தாய் பேசுவதுவுமில்லை
பகல் வேடம் தரிப்பதுவுமில்லை
பயம் எங்களுக்கு வந்ததுவுமில்லை
பாறை மரம் என பாகுபாடுமில்லை
எப்போதும் ஓரணியாய்
எங்களின் எண் மடங்கு இலக்காய்
தவிடு போலிருப்போம்
தாளாத வலி கொடுப்போம்
புற்றிலும் போதி மரத்திலும் வாசம்
ஒவ்வொரு நாளும் ஓய்வறியாமல்
உழைப்பு என்பதே மந்திரமாய்
-- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (28-Feb-19, 10:11 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : erumpu
பார்வை : 503

மேலே