பெண்மையின் மகத்துவம்

அதில் சுகம், இதில் சுகம்
அது சிறப்பு, இது சிறப்பு என
பிதற்றும் மனிதா.. என்றோ
தன் கருவில் உருவாக போகும்
தன் மழலைக்காக
அதன் பசியை போக்க, இன்றே
தன் மார்பகத்தை வளர்த்து, என்றோ
வரவிருக்கும் தன் துணையை
வாழ்த்தி அவனுக்காக இவள்
பூப்பெய்தி காத்திருக்கும், இந்த
பூவையை விட இப்பூவுலகில்
சிறப்பு என சொல்லுதல் சிறப்பமோ ..!

எழுதியவர் : சங்கீதாதாமோதரன் (8-Mar-19, 5:55 pm)
சேர்த்தது : Sangeethadamodharan
Tanglish : penmayin magathuvam
பார்வை : 5081

மேலே