பெண்களின் கருவறை
பெண்களின் கருவறையை
ஒருமுறையேனும் ஆண்களுக்கு
படைக்கமாட்டானா படைத்தவன் ...
ஊழலை இவ்வுலகிற்கு அறிமுகம்
செய்ததே அவனாயிற்றே
ஆண் வர்க்கத்தில் சிலரை ஆதிக்கம்
செலுத்த அனுப்பிவைத்து – அனைத்திற்கும்
அடித்தளமிட்டதே அவன் என்பதை
மறந்து அவன் முன்னே மண்டியிடுகிறோம்
மனம் என்பது இருந்திருந்தால்
தன்னிலை மறந்து திரியும் நாசக்காரர்களை
நாசம் செய்திருக்க வேண்டுமே
அநியாயத்திற்கு அதிபதியாக இருக்க
ஆசை கொண்டுள்ளான் போலும்
ஈடு இணையில்லா சக்தி
இருப்பதால் நினைத்தையெல்லாம்
அநீதியாய் செய்யும் அதிபதிக்கே
அனைத்தும் வெளிச்சம் ......
இவள்
கீதாவின் மகள்