புத்தகத்தின் குரல்
என் இனிய இளைய சமுதாயமே
நொடிப்பொழுதும் மாறிவரும் இன்றைய நவீன உலகில்
அலைபேசி அதிர்வுகளுக்கு இடைவேளை விடுத்து ,
தனிமையில் உன்னோடு உரையாடவும்
வறுமையில் உன்னை வருடவும்
வளமையில் உன்னை வாழ்த்தவும்
உன்னோடு என்னையும் எடுத்து செல்வாயா ?
எனக்குப் பல முகங்கள் உண்டு
என்னுள் பல மொழிகள் உண்டு
பலதுறைகளில் என் பங்கும் உண்டு
உன்னோடு நானும் வளர ஆசையும் உண்டு
உன் திறனை வளர்க்கும் கலைகளும் என்னோடு உண்டு
நீயும் என்னுடன் மௌன மொழியில் உறவாடுவாய் என்று
உனக்காக நாளும் காத்திருக்கின்றேன்
நம்பிக்கை கொண்டு!!!