பெண்ணியம்

கருவில் சிறு மணியாய் தொடங்கி

தாயின் மடியில் தவழ்ந்து

தந்தையின் தோளில் வளர்ந்து

உடன்பிறப்புடன் விளையாடி மகிழ்ந்து

இளம்பருவத்தில் பட்டாம்பூச்சியாய் பறந்து

வகுப்பறையில் கல்வியறிவு சிலப் பெற்று

பணிதுறைகளில் அனுபவம் பலக் கற்று

மணவறையில் மணமகளாய்

மறுவீட்டில் மருமகளாய்

மணந்தவனின் மனதிற்கு இனியவளாய்

கணவனின் காதலின் கனியால் கருதாங்கி தாயாய்

புதுபிறப்பு பெற்று புது சமுதாயம் படைக்கும்

எனக்கு

தொடும் வானமும்
தொடுகின்ற தூரம் தான்

தொட்டுவிடுவேன் கிட்டிய நொடிகளில்….
இப்படிக்கு
பெண்ணியம்…..

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (16-Apr-19, 6:00 pm)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
Tanglish : penniam
பார்வை : 1318

மேலே