துணிந்தெழுந்தால் நீயும் - வீரனே
எழுந்து வா !
தோழனே
எழுந்து வா!!
நாமும்
தேடித்தான் பார்ப்போம்!
அருவியாய் எழுந்து
தினம்
துள்ளிக் குதிப்போம்!!
படிப்படியாய்
அடியெடுத்து வைத்தால்
புது வழி பிறக்கும்!
நதியைப் போல்
துணிந்து நகர்ந்தால்
கடல் வந்து கிடைக்கும்!!
புயலாய் - நீயும்
உருமாறும் போது
எது - உன்னை தடுக்கும்?
தடையை உடைத்து
தாண்டும் போது
வெற்றி கொடி
உன் கையில் பறக்கும்!!
ஐயா - அப்துல் கலாம்
போன்று - நீயும்
நெடிய கனவு கண்டால்
உனது படைப்பும்
இந்த விண்ணை அளக்கும்!
உனக்குள்
விடாமுயற்சி இருந்தால்
ஒரு நாள்
உன்னைக் கண்டு
இந்த உலகம் வியக்கும்!!
ஆதலால்,
எழுந்து - வா !
தோழனே
எழுந்து - வா!!
துணிந்தெழுந்தால்
நீயும் - வீரனே!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
