எண்ணங்கள், ஜாக்கிரதை

உணர்வில் வேரூன்றி,
இதயத்தில் அரும்பி,
சிந்தையில் மலராகி,
மணம்பீறி, உடல் சுற்றி ஒளியாகி,
அருகிருப்போரை அலையாகத் தீண்டி,
நெகிழியை மிஞ்சி அழியாது உலவி,
பிரபஞ்சத்தையும் இசையச் செய்து,
உண்மைக் காட்சியாகி, இறுதியில்
உன்னிடமே மீண்டும் வரும்!

எனவே,
எண்ணங்கள்.., ஜாக்கிரதை!

எழுதியவர் : நந்தினி.சு (6-May-19, 10:55 am)
சேர்த்தது : Nanthini S
பார்வை : 108

மேலே