பிறப்பு

ஆயிரம் முறை உன்னை அழைத்தேன்
ஆயிரம் முறை உன்னை
உன்னோடு பேசி உயிர்
வாழ்ந்தேன்..

மௌனமாக உன்னை ரசித்து
மௌனமாக உன்னோடு பேசி
நானும் மௌனமாய் மாறி
நீயும் மௌனமாய் மாறியது
ஏனோ!!

கைகோர்த்த காலங்கள்
நினைத்து
காத்திருந்த காலங்கள்
நினைத்து
மதி இல்லா விதி பேச்சு
கேட்டது ஏனோ?

பிறை நிலவும் தேய்ந்து
காணாமல் போக
என் கனவுகளும் தேய்ந்து
காணாமல் போனதோ....

இனி ஒர் பிறவி வேண்டாம்
என்று பிறப்பின்
கடனை முடிப்பேனோ.....

எனக்கென வாழா உறுதி
நெஞ்சம் கொடு....

எழுதியவர் : உமா மணி படைப்பு (17-May-19, 8:26 am)
சேர்த்தது : உமா
Tanglish : pirappu
பார்வை : 228

மேலே