அம்மா
அம்மா ..!
உக்கிரத்தின் ரூபமே
என் அன்னையின் மூலமே
தில்லைக் காளியம்மா ;
உன் தரிசனம் நாடுகின்றேன்
நான் சாந்தமாக வேண்டியம்மா;
வெண்நிற பட்டில்
குங்கும அபிஷேகத்தில் நீ
உன் வண்ணக் கோலம் மனக்கண்ணில்
சுந்தர காளியம்மா ;
உன் சாந்த சொரூப கோலத்தை
காண்பேனாம் சிவகாமியில்;
ஞானப் பசி தீர்கின்றாய்
சிதம்பரத்தில் எல்லையில் இருந்து
ஆளும் என் காளியம்மா
உன் தாலாட்டில்!
~ நியதி ~