தனிமையில் இரவில்
தனிமை வந்து வாட்டும் நேரம் தலையணையும் தாய் மடியாக மாறி தாலாட்டு பாடிட.....
யாரும் அறிந்திடாது சிந்தும் கண்ணீர் துளிகள் யாவற்றையும் தன்னுள் தாங்கி....
தென்றல் காற்றாய் மனதினை வருடி
விழியோரம் படிந்த ஈரமும் நீங்கும்படி ஆறுதல் அளித்து...
காலை பொழுதோடு மீண்டும் புதிதாக பிறக்க செய்யும் இயற்கையின் அற்புதம் இரவு....