நல்லிரவு
வானின் கரு நீல மேனியில்,
பாண்டி நாட்டு முத்தை சிதறடித்தார் போல விண்மீன் கூட்டம் !
நடுவே எல்லா காதலரும் தன் துணையின் முகத்தை பொருத்தி பார்க்க வாட்டமாய் வெண்ணிலவு !!
இலைகளின் சலசலப்பினூடே தண்ணென்றடிக்கும் காற்று !!!
கூகையும் கவிஞனும் மட்டுமே ரசிக்கும் இரவு