நடந்தே சென்றிருக்கிறார்

புண்ணிய பூமியான
பாலஸ்தினத்திற்கு
ஆங்கிலேயர் ஒருவர்
சுற்றி பார்க்க
சென்றார்

கலிலேயாக் கடலில்
படகில் செல்ல விரும்பி
படகோட்டியிடம்
எவ்வளவு கட்டணம்?
என்று கேட்டார்

படகோட்டி
பத்து ஷில்லிங் என்றார்,
ஆங்கிலேயரோ
எங்க ஊரில் வெறும்
ஏழு பென்ஸ் என்றார்

அதற்கு படகோட்டி
அது உங்களூரையா,
இது கலிலேயாக் கடல்
இயேசு கிறிஸ்து நடந்த
கடலய்யா என்றார்

ஆங்கிலேயர் அதற்கு
அநியாய படகு கட்டணத்தால்
அந்த ஏழை இயேசு
எப்படி கொடுப்பார்?
அதனால் தான் கடல்மேல்
நடந்தே சென்ருக்கிறார்.

எழுதியவர் : கோ. கணபதி. (16-Jun-19, 8:23 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 99

மேலே