தமிழன்

அரசியல்வாதிகளின் பகடைக்காயாய்
வாழ்ந்து கெட்ட இனமடா தமிழினம்;
ஈழத்து உறவுக்காய் தீக்குளித்து துடித்து மாண்டனர்
எத்தனை எத்தனை தொப்புள் கொடியுறவுகள்;
உலக அரசியலின் கையில் இன்னும் பாவைகலாக ஆட
தமிழன் உணர்வற்ற ஜடமல்ல ;
வன்முறைகளினால் காயப்படுத்தி எரித்த
சாம்பலிருந்து எழுவான் தமிழன் பீனிக்ஸ் பறவையாக ;
துச்சமென மதித்து காலில் மிதியாது
சக மனுஷனாக மதித்தால் விதி செய்யும் இனமடா தமிழினம் ;
உள்ளுணர்வின் எண்ணங்களை தனது கவசமாக அணிந்து
பொறுமையுடன் கூடிய அன்பை ஆயுதமாக ஏந்தி
மனிதாபிமானத்தை வாழ்வின் கீதமாக்கி
உலகை கைகூப்பி தொழவைக்கும் அகிம்சைவாதியாக
மாசற்ற வைரமாய் ஜொலிக்கட்டும் இளைய தமிழ்ச் சந்ததி!

~ நியதி ~

எழுதியவர் : நியதி (21-Jun-19, 7:30 pm)
Tanglish : thamizhan
பார்வை : 1928

மேலே