நீ ஒரு வித்தியாசமான மலர்

மூடிக் கிடந்த மலர்களுக்கிடையில்
முல்லையென சிரித்து நின்றாய் !
மொட்டுக்கள் மலர்ந்து திறந்து போது
இமைகள் மூடி மௌனமாய் மகிழ்ந்து நின்றாய் !
மூடிக்கிடக்கும் மலர் மொட்டிற்கு அழகில்லை
மூடிய இமைகள் மொட்டானாலும் உன் விழி மலருக்கு அழகுண்டு !
இயற்கையில் நீ ஒரு வித்தியாசமான மலர் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jun-19, 9:27 am)
பார்வை : 127

மேலே