ஊர்திருவிழா




  1. கோயில்திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகள் மூன்றுநாட்களாக வந்துபோகின்றன இன்றே கடைசிநாள் !நேற்று ...உடல்முழுவதும் சே றுபூசி க்கொண்டு வலம்வருவது அக்னிசட்டி எடுப்பது அடியொற்றி அங்கபிரதட்சணம் செய்வது குழந்தைக்கு மொட்டையடிப்பது என வகைவகையான நேர்த்திகடன்கள் முடிந்தன //இன்று ..கரிநாள் விழாவின் திருநாள் ...உறவுகள் வீடுதிரும்பும் பெருநாள் ..//அம்மனின்பெயாரால் வளர்க்கப்பட்டு வெட்டப்பட்ட சேவல்களும் ஆட்டுகிடாய் களும் உண்டுமுடித்து உடன்பிறப்புகளும் உறவுகளும் ஊர்திரும்பும் மாலையில் ...வீட்டின் பின்புறம் கோழிகளுக்கு இரைபோட்டுகொண்டிருந்தாள் பாட்டி !!!

எழுதியவர் : ச ஜெகதீசன் (26-Jun-19, 11:58 am)
சேர்த்தது : ச ஜெகதீசன்
பார்வை : 70

மேலே