நீ கவிதை

மேத்தாவின் கவிதைபோல் 
எளிமையாய் சிரித்திட்டாய்-
வைர்முத்து விஞ்ஞானம் என்னுள்ளே துளிர்க்கிறது-

கண்ணதாசன் வரிகள் போல் கருத்தாய் நீ பதிந்திட்டாய்-
கவிக்கோவின் பத்திபோல் கண்களுக்குள் மின்மினிட்டாய்-

கல்கி வார்த்தை போல் 
கனவுக்குள் நிறைந்திட்டாய்-
கம்பனைப்போல் என்னை 
இன்பமாய் திருடிட்டாய்-

சுஜாதாவின் சிந்தனைதான் உன
கூந்தலா?-அதற்குமேல் ஐன்ஸ்டீனும் குழம்பிநின்றதொரு தொடர்போ???

பாரதியின் புதுமைப்பெண் -உன் 
கண்களோ ???-
பாவேந்தன் பாடியபெண் -உன் 
விம்பமோ???

உமறுப்புலவன் கற்பனையோ?-
வள்ளுவன் தன் சொல்லழகோ??-
என்ன சொல்லி நான் விளிப்பேன்!!!
என்றாலும் நீ
கண்பார்த்து புன்னகை செய்-
கண்டமைந்தை வென்றிடுவேன்-
ஐந்து வரி நீ பேசு!-அமுதகவி
அஸ்மினை நான் வென்றிடுவேன்-

#சவாளையூர் முஜாஹித் அஹமத்

எழுதியவர் : முஜாஹித் சரீப் அஹமத் (22-Jul-19, 11:07 am)
சேர்த்தது : savalaiur mujahith 930
பார்வை : 65

மேலே