ஜூலை 27

தமிழனாக நின்று
தமிழின் பெருமையை
தழைத்தோங்க செய்யவே
தனுஷ்கோடியில் பிறந்து
தன்னிகரற்ற தலைவராகவும் திகழ்ந்து
இந்திய மண்ணின் அறிவியல் புகழை
விண்ணை தொட வைத்து
கலாம் என்னும் பெயர் கொண்டு
காலம் கடந்து வாழும்
தங்க மகன்
தரை மீது சரிந்த நாள் இது....
தன் நம்பிக்கை நாயகனை இழந்து
இளைய சமுதாயமே கலங்கிய நாள் இது....

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (27-Jul-19, 1:17 pm)
பார்வை : 218

மேலே