வா

வா!
என் கனவினை
வண்ணம் தீட்டு!
பட்ட மரத்தினைப்
பூக்க செய்!
பாலை வனத்தில்
ஊற்றெடுத்து வா!
மௌனத்தில் மூழ்க செய்!
விழிகளால் உள்ளம் கொய்!
பேசு! உன் பாஷை
எனக்கு மட்டும் புரியட்டும்!
ஏசு! அதில் கொஞ்சம்
சிணுங்கல் இருக்கட்டும்!
காலத்தைச் சிறைபிடி!
தூக்கத்தைக் கொள்ளையடி!
உன் உள்ளங்கை அசைவுகளால்
உலகத்தை உறைய வை!
காதல் தீ மூட்டு!
குளிராய் எனை வாட்டு!
கண்ணீரில் நீந்த வை!
கன்னத்தை ஏந்தி கொள்!
மகனாக மடியில் கொஞ்சு!
மகளாகத் தோள் சாய்!
உணர்வு வெள்ளத்தில் மட்டும்
உறவால் தம்பதிகள்!
வா!
விரல் கோர்!
உயிர் சேர்!
தனித்தீவில் தத்தளிப்போம்!
வா!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (4-Aug-19, 5:10 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : vaa
பார்வை : 146

மேலே