தனித்து விடுவாயா
தனித்து விடுவாயா
ஒரு மணித்துளி கூட உன் நினைவின்றி
கடக்க மறுக்கிறது
எல்லா காதல் பாடலும்
உனக்கானது போன்றே தோன்றுகிறது
மர இலை அசைவது கூட
மலர் உன் வருகையை சொல்வது போல் இருக்கிறது
கைபேசியின் ஒவொரு சிணுங்கலும்
உன் அழைப்பாகவே தோன்றுகிறது
எந்த வேலை செய்தாலும்
உன் நினைவு ஒரு ஓரமாய்
நதிபோல் ஓடிக்கொண்டே இருக்கிறது
உறக்கத்திலாவது உன்னை மறந்து விடுவேன் என்ற
என் எண்ணம் பொய்த்து போனது நீ
கனவு வழி வந்து என்னை காதல் செய்தபோது
என்னை தனித்து விடுவாயா -இல்லை
எப்போதும் தவிக்கவே விடுவாயா