உயர்ந்தவள்

இளமைக் குன்றா அழகு முகம்
இமைக்கும் விழிகளில் தனியழகு
இம்மையில் வறுமை இவளை வாட்டினாலும்
வறுமையால் இவள் அழகை ஒன்றும்
வாட்டமடைய செய்ய முடியலை
உடுத்திய உடையில் தூய்மை அவள்
உள்ளத்தின் தூய்மை தெள்ளத் தெளிவாக்க
தானே கோவில் தோட்டத்திலிருந்து பறித்த
அன்றலர்ந்த பூக்களை துளசி தளத்தோடு
சேர்த்து மாலை தொடுத்து கோவிலில்
பள்ளிக்கொண்ட அனந்தனுக்கு சமர்ப்பித்து
ஆனந்த பரவசமடைந்தால் நங்கை அவள்
பாவம் பருவம் எய்தும் முன்னே மணமுடித்து
வாழ்விழந்தாள் குழந்தை யாகவே அதன் பின்னே
தன்னை தன் உடல் பொருள் ஆவி இனி
அந்த மாதவந்தே என்று கோவிலே கதியென்று
வாழ்ந்து வருகின்றாள் இதோ கோவில்
தீபாராதனை …… இவள் தன் தூய குரலில்
ஆண்டாளின் திருப்பாவைப் பாடி
கண்களை மூடி தன்னையே மறந்து
கண்ணனையே மனக்கண் முன் நிறுத்தி
துதித்து நிற்கின்றாள் …...இன்றைய மீராவாய்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Aug-19, 2:16 pm)
Tanglish : uyarnthaval
பார்வை : 171

மேலே