நிலவே

நிலவே
ஏன் வெட்கம்?
உன் இன்னொரு முகம்
இந்தியாவுக்கு தெரிந்து விட்டதே
என்றா?
கவலைப்படாதே.
பஞ்சாங்கம் தாண்டி உன்னை
பார்க்க வர மாட்டார்கள்.
தீட்டுப்பட்டதே என்று
இவர்கள் தர்ப்பைப்புல்லுடன்
ஆற்றில் குளித்துக்கொண்டிருப்பார்கள்.

==================================================

எழுதியவர் : ருத்ரா இ paramasivan (23-Aug-19, 4:55 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : nilave
பார்வை : 113

மேலே