கண்களும் கவி பேசுமே

உன்னை பார்த்ததும் தான் தெரிந்து கொண்டேன்
விழிகள் கூட கவி எழுதும் என்று..
எப்பொழுமே சிரித்து கொண்டிரு..
நீ சிரிக்கும் போது சிரிப்பது உன் உதடுகள் மட்டுமல்ல...
உன் கண்களும் தான்...
நீ பேசும் வார்த்தைகளை விட
நான் அதிகம் நேசிப்பது உன் மௌனத்தையே..
மௌனத்திலும் உன் விழிகள் பேசும்
ஆயிரம் வார்த்தைகளை நீ உணர்த்தாமல் நன் உணர்வேன்..
நான் மனதிற்குள் நினைக்க முற்படும் முன்னரே
உன் வார்த்தையில் வெளிப்படும் எனது எண்ணம்...
இப்படியோர் உறவை,
என்றும் என் நினைவுகளாக மட்டும் வைத்து கொள்வதா?
நிஜமாகவும் அருகில் இருக்க ஆசை..

எழுதியவர் : kaavya (27-Aug-19, 1:24 pm)
சேர்த்தது : காவ்யா
பார்வை : 315

மேலே