அவளும், குடையும்
என்ன பாக்கியம் செய்ததோ
அந்த சின்ன கைக்குடை
அவள் கையில் விரிந்து
அவள் தலைமேல் இருந்து
அவள் முகம் வெய்யலில்
வாடாமல் காத்து நிற்க
அந்த குடையாய் மாறிட முடியலையே
என்னால் அவள் முகத்தை காக்க
காத்து அவள் காதல் ஸ்பரிசம் பெறவே