பூத்தது

ஒற்றைக்காலில் இயற்றிய தவத்தின்

பலனோ

தடாகத்தில் தனித்து கூம்பியிருந்த

மொட்டு

இதழ் விரிக்கின்றதே காதலனைக்

கண்ட

காதலியின் சிரிப்போ ஏதோ

ஒன்று

பூத்தது தாமரை..,

எழுதியவர் : நா.சேகர் (15-Oct-19, 4:57 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pooththathu
பார்வை : 166

மேலே